இருமை வகை - திருக்குறள் கதை
இருமை வகை இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. (23) சுந்தர்... நான் அவனைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். சில நேரம் அவனைப் போல இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியுமா என்று தோன்றும். அவனைச் சுற்றியுள்ளவர்கள் பலரும் அவனிடம் தன் துயரங்களை - சிக்கல்களை - இடர்களைச் சொல்லி இருப்பார்கள். எல்லா சிக்கல்களுக்கும் அவனிடம் விடை இருக்குமா? அவனுக்கே தெரியாது. ஆனால், விடை தேடி வந்தவர்கள் எப்படியும் ஒரு நிம்மதியோடு செல்வார்கள்... அது தான் சுந்தர். ஒரு நாள் அவனிடம் கேட்டே விட்டேன். "டேய், சுந்தர்... உன்ன பாத்தா செம்ம பொறாமையா இருக்கு மச்சான்..." சுந்தர் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை... கண்ணை மட்டும் சுருக்கிப் பார்த்தபடி, " ஏன்டா அப்படி சொல்ற...?" "ஏன்னா…. நீ எப்பவும் மகிழ்ச்சியா இருக்க...? காசு பணம் பத்திகூட நீ கவலைப்பட்டு பாத்ததில்ல... உன்னை மாதிரி நிறைய பேர எனக்கே தெரியும். ஆனா, நீ உன்கிட்ட இருக்குற மகிழ்ச்சிய மத்தவங்களுக்கும் தந்துகிட்டு இருக்க...? எப்படிடா உன்னால இப்படி இருக்க முடியுது..." "நீயே பதில் சொல்லிட்டு நீயே கேள...