தமிழாய்வர் சீனி வேங்கடசாமி - Mayilai Seeni Venkatasami - A Tamil Researcher

மயிலை சீனி வேங்கடசாமி தமிழாலே ஒன்னாணோம்னு சொல்லிக் கொள்ளும் நாம் முன்னால் நம் வரலாற்றினைச் சரியாகத் தரவுகளுடன் புரிந்து கொண்டுள்ளோமா? தரவுகள் இல்லாமல், சாதீயம், பரம்பரை, மதம் எனப் பலப்பிரிவுகளால் பிரிந்து - ஒருதலைப்பட்சமாக வரலாற்றைத் திரித்து வைத்திருந்த வேளையில், தரவுத்தேடி - நாடு முழுதும் சென்று - களப்பணியாற்றி - ஆய்ந்து - பல ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் மூலம், தமிழின் தொன்மையை உலகுக்கு - ஏன் தமிழருக்கே காட்டிய மயிலை சீனி வேங்கடசாமியின் 117 வது பிறந்தநாள் இன்று... மயிலை சீனி வேங்கடசாமி (16.12.1900 - 8.5.1980) டிசம்பர் 16, 1900 அன்று மயிலை சீனிவாசன் எனும் சித்த வைத்தியர்க்கு மூன்றாம் மகனாகப் பிறந்தார், வேங்கடசாமி. முதல் அண்ணன் தந்தையைப் போல் சித்த மருத்துவத்தில் நாட்டம் கொள்ள, இரண்டாம் அண்ணன் கோவிந்தராசனோ, தமிழ்ப்பற்று கொண்டு கவியெழுதலானார். திருக்குறளின் காமத்துப்பாலின் 250 குறள்தனை நாடகவடிவாய் எழுதினார். மேலும், மயிலை நான்மணிமாலை எனும் நூலையும் எழுதியுள்ளார். அண்ணனின் தமிழ் எழுத்துக்களைப் படிக்கத் துவங்கிய வேங்கடசாமிக்கும் தமிழின் தொன்மையான அனைத்தையும் தேடிப்படிக்க எண்ணம்...